fbpx

நாடாளுமன்ற தேர்தல்..!! களத்தில் இறங்கிய அதிமுக..!! 4 குழுக்களை அமைத்து எடப்பாடி பழனிசாமி உத்தரவு..!!

நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆகியவற்றை அமைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி மற்றும் பெஞ்சமின் ஆகிய 5 பேர் கொண்ட குழுவை அமைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, ஓ.எஸ்.மணியன், ஆர்பி உதயகுமார், வைகைச்செல்வன், வளர்மதி ஆகிய 10 பேர் அடங்கிய தேர்தல் அறிக்கை தயாரிக்க உள்ளனர்.

மேலும், தம்பிதுரை, செங்கோட்டையன், தளவாய் சுந்தரம், செல்லூர் ராஜூ, தனபால் ஆகியோர் தேர்தல் பிரச்சாரக்குழுவில் உள்ளனர். இவர்கள் அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சாரப் பணிகளை ஒருங்கிணைப்பு செய்வார்கள். அதேபோல, சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பி.வேணுகோபால், அப்துல் ரஹீம், ராஜ் சத்யன், ராஜலட்சுமி, விபிபி பரமசிவம், இன்பதுரை ஆகியோர் தேர்தல் விளம்பர பணிகளுக்கான குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Chella

Next Post

BREAKING NEWS | பரபரப்பு.! ராமர் கோவிலில் தடுத்து நிறுத்தப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பம்.!

Mon Jan 22 , 2024
அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் சிறப்பு வாய்ந்த ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் ராம் லாலாவின் குழந்தை பருவ சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்விற்கு அரசியல் தலைவர்கள் சினிமா நட்சத்திரங்கள் தொழிலதிபர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனது குடும்பத்தினருடன் புறப்பட்டு சென்றார். இந்த […]

You May Like