fbpx

நாடாளுமன்ற தேர்தல்..!! இறுதியாகும் தொகுதி பங்கீடு..!! தமிழ்நாடு வருகிறார் சோனியா காந்தி..!!

கனிமொழி அழைப்பின் பேரில் அக்டோபர் 14ஆம் தேதி சோனியா காந்தி தமிழ்நாடு வரவுள்ளார். அப்போது நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு இறுதியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

திமுக மகளிரணி சார்பில் அக்டோபர் 14ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோருக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சோனியா காந்தி தமிழ்நாடு வருகை தருவதால் நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடைசியாக 2018 ஆம் ஆண்டு கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு சோனியா காந்தி தமிழ்நாடு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

”நீதிமன்றத்தை விட நீங்க ஒன்னும் பெரிய ஆள் கிடையாது”..!! நடிகர் விஷாலை கண்டித்த ஐகோர்ட்..!!

Fri Sep 22 , 2023
நடிகர் விஷால் தன்னை நீதிமன்றத்தைவிட பெரிய ஆளாக எண்ண வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதுரை பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் வாங்கிய கடனை லைகா நிறுவனம் திருப்பிச் செலுத்தியது. இத்தொகையை திருப்பித் தரும் வரை, விஷால் தயாரிக்கும் திரைப்படங்களை லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை மீறி விஷால் தயாரித்த ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் வேறு நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. […]

You May Like