fbpx

“ PFI மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தமிழக அரசுக்கு ஆபத்தாக முடியும்..” ஹெச். ராஜா ட்வீட்…

PFI மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தமிழக அரசுக்கு ஆபத்தாக முடியும் என்று ஹெச். ராஜா ட்வீட் செய்துள்ளார்..

கடந்த 2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கிளைகள் உள்ளன. பல்வேறு கலவரங்கள், படுகொலைகளில் இந்த அமைப்பின் நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதன்பேரில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 22-ம் தேதி திடீர் சோதனை நடத்தினர். அப்போது 45 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. வங்கிகளில் பிஎஃப்ஐ அமைப்பு ரூ.120 கோடி டெபாசிட் செய்திருப்பதும், வளைகுடா நாடுகளில் இருந்து ஹவாலா முறையில் அதிக அளவிலான தொகையை கொண்டு வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்தநிலையில் மத்திய அரசு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து நேற்று உத்தரவிட்டது.. இந்த தடை அமல் உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மட்டுமல்ல, அதன் துணை அமைப்புகள் மற்றும் அதற்கு உதவும் அமைப்புகளுக்கும் ஐந்து வருடம் மத்திய அரசு தடை விதித்துள்ளது..

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் பிஎஃப்ஐ மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.. மேலும் பிஎஃப்ஐ அமைப்புக்கு ஆதரவாக போராட்டம் நடத்தவும் விசிக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் முடிவு செய்துள்ளன..

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் 1991 ல் எல்.டி.டி.ஈ க்கு அரசு தகவல் கசிய விட்டதற்காக கருணாநிதி ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. எனவே தற்போது தடை செய்யப்பட்டுள்ள PFI மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் அனுசரணையாக நடப்பது தமிழக அரசிற்கு ஆபத்தாக முடியும். எனவே நாளை PFI க்கு ஆதரவாக போராட்டம் நடத்துவார் மீது நடவடிக்கை தேவை..” என்று குறிப்பிட்டுள்ளார்..

Maha

Next Post

விவசாயிகளுக்கு நாளை குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ நடைபெறும்...! ஆட்சியர் முக்கிய அறிவிப்பு....!

Thu Sep 29 , 2022
தருமபுரி மாவட்டத்தில்‌ விவசாயிகள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ நாளை நடைபெறும். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாந்தி அவர்கள்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; .தருமபுரி மாவட்டத்தில்‌ விவசாயிகள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ வருகின்ற 30.09.2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூடுதல்‌ கூட்ட அரங்கில்‌ நடைபெற உள்ளது. எனவே, விவசாயிகள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ தருமபுரி மாவட்டத்தைச்‌ சார்ந்த விவசாயிகள்‌ கொரோனா தடுப்பு விதிமுறைகளைஸபின்பற்றி இக்கூட்டத்தில்‌ […]

You May Like