fbpx

கடற்கரைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம்.. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..

கடற்கரைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது..

பருவநிலை மாற்றம் என்பது உலகளாவிய பிரச்சனை உள்ளது… தொழிற்துறையின் அபரிமிதமான வளர்ச்சி, காடுகளை அழித்தது, நீர் நிலைகளை அழித்தது போன்றவற்றின் விளைவாக உலக வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது.. இதன் காரணமாக விஞ்ஞானிகள் கணித்ததை விட வேகமாக பனிப்பாறைகள் உருகி வருகின்றன. இதனால் கடல்நீர் மட்டமும் அதிகரித்து வருகிறது.. இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் முன்னெடுத்து வருகின்றன..

அந்த வகையில் இந்தியாவிலும் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு முக்கியமான காரணமாக இருக்கும் சிங்கிள் யூஸ் பிளாஸ்டிக் ( ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழி) பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.. தமிழக அரசும் பிளாஸ்டிக் கவர்களுக்கு மாற்றாக மீண்டும் மஞ்சப்பை உள்ளிட்ட திட்டங்களை முன்னெடுத்து வருகிறது..

இந்நிலையில் சென்னை மெரினா, பெசண்ட் நகர், திருவான்மியூர் கடற்கரைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.. பிளாஸ்டிக் இல்லா கடற்கரையாக பராமரிக்கப்படும் 3 இடங்களிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது.. இந்த 3 கடற்கரைகளிலும் காலை, மாலை என இருவேளை ஆய்வு செய்யப்படும் எனவும், கடற்கரைகளுக்கு பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரும் பொதுமக்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

பெண்ணின் மூன்றாவது கணவனால் 11வயது மகளுக்கு பாலியல் தொல்லை...!

Fri Aug 5 , 2022
திண்டுக்கல் செல்லாண்டி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் முருகன் (44). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். முருகனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில், அவர் திண்டுக்கல் சென்னமநாயக்கன்பட்டியில் உள்ள 37 வயது பெண்ணுடன் பழக்கம் வைத்திருந்தார். அந்த பெண்ணிற்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்துள்ளது இந்நிலையில், இரண்டாவது கணவர் மூலம் அந்த பெண்ணுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மேலும், அந்த பெண் முருகனை மூன்றாவதாக […]

You May Like