fbpx

மக்களே உஷார்..! தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்…! வானிலை ஆய்வு மையம்..

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்து 7 நாட்களுக்கு பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் காலையில் அறிவித்திருந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு தமிழக்தில் உள்ள சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று தற்போது அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி சிவகங்கை, மதுரை, விருதுநகர் புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, ஈரோடு, தேனீ, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும்.
மேலும் தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Kathir

Next Post

கார்ல்சனுக்கு டஃப் கொடுத்த பிரக்ஞானந்தா…! உலகக் கோப்பை இறுதிப்போட்டியின் முதல் சுற்று ட்ராவில் முடிந்தது…!

Tue Aug 22 , 2023
அஜர்பைஜானின் பாகுவில், கடந்த ஜூலை 30ஆம் தேதில் முதல் செஸ் உலகக் கோப்பை 2023,வெகு விமர்சையாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 206 வீரர்கள் பங்குபெற, ஒற்றை-எலிமினேஷன் விளையாட்டு முறையில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயது கிராண்ட்மாஸ்டர் (ஜிஎம்), ஆர். பிரக்ஞானந்தா பங்குபெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் உலக நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனுடன் பிரக்ஞானந்தா மோதி வருகிறார். […]

You May Like