fbpx

மக்களே..!! எதுவும் ஆகாதுனு நெனச்சி இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!! எச்சரிக்கும் சுகாதாரத்துறை..!!

சென்னையில் தீபாவளி கொண்டாட்டத்தால், காற்று மாசு அளவு அதிகரித்து பொதுமக்களுக்கு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகமான பட்டாசுகளை பொதுமக்கள் வெடிக்க தொடங்கி விட்டனர். இதனால் காற்று மாசுபாடு கணிசமான அளவில் அதிகரித்துள்ளது.

குறிப்பாக காற்றின் தரக் குறியீட்டில் 101-200 என்ற மிதமான வரம்பில், ஏற்பட்ட இந்த ஏற்றம் காரணமாக மூச்சுத் திணறலை அனுபவிக்கக்கூடிய ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளை கொண்ட நபர்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நேரத்தில் நீண்ட நேரம் வெளியில் இருப்பது இதய நோய் உள்ளவர்களையும் பாதிக்கலாம். எனவே, மேற்கண்ட குறைபாடு உள்ளவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்து காற்று மாசுபாடு குறித்து அறிவுறுத்தி வருகின்றனர். அதே போல், தங்கள் வீட்டின் அருகில் இதே போல் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களின் பொதுநலன் கருதி செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Chella

Next Post

பெண் சேவைக்கான முதல்வர் விருது...! 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு மட்டுமே...! முழு விவரம்

Sun Nov 12 , 2023
தமிழ்நாடு சமூக நலத் துறையின் சார்பில், 2024 ஆம் ஆண்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு அவ்வையார் விருது தமிழக முதலமைச்சர் அர்களால் உலக மகளிர் தின விழா மார்ச் 2024 ல் வழங்கபட உள்ளது. மேற்படி விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும்,18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைக சமூக […]

You May Like