தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்ற நிலையில், இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழக சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழையும், மன்னார் வளைகுடா, தென்தமிழகம், குமரி கடல் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காட்டும் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.