தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் இன்று 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதன் அடிப்படையில், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், சேலம், கடலூர், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், தர்மபுரி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துக் கொண்டுள்ளது.
அதோடு பிற்பகல் சமயத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களிலும் கனமழை பெய்வதற்காக வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.