fbpx

பிப்ரவரி 14 அன்று பசுவை கட்டி பிடித்து காதலர் தினம் கொண்டாட வேண்டும்…! கலாய்க்கும் நெட்டிசங்கள்…!

ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினமாக கொண்டாடப்படும் பிப்ரவரி 14 அன்று “பசுவை கண்டுபிடிக்கும் தினமாக” கொண்டாடுமாறு இந்திய விலங்கு நல வாரியம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் கீழ் செயல்படும் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில்,ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 அன்று காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இனிவரும் காலங்களில் காதலர் தினத்தன்று “பசுவை கட்டிபிடிக்கும் தினமாக” கொண்டாட வேண்டும் என மக்களைக் கேட்டுக் கொண்டது.

தாய் பசுவின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், நேர்மறை ஆற்றல் நிறைந்ததாகவும் மாற்றும் வகையில், அனைத்து பசுப் பிரியர்களும் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு அணைப்பு தினமாகக் கொண்டாடலாம்” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.மேலும் பசுக்களை கட்டிப்பிடிப்பதால் தனிநபர் மற்றும் கூட்டு மகிழ்ச்சியை” அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.

இந்துத்துவாவை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் மத்திய பாஜக அரசின் இந்த வினோதமான அறிவிப்பிற்கு நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Vignesh

Next Post

லாட்டரியில் அடித்த ஜாக்பாட்!... விமானம், சொகுசு வீடு வாங்கி இளம்பெண் அசத்தல்!... எத்தனை கோடி பரிசு தெரியுமா?

Thu Feb 9 , 2023
கனடாவில் இளம்பெண் ஒருவர் விளையாட்டாக வாங்கிய லாட்டரி சீட்டில், ரூ.290 கோடி பரிசு விழுந்துள்ளது. இதில், விலையுயர்ந்த கார், விமானம், சொகுசு வீடு உள்ளிட்டவைகளை வாங்கி அசத்தியுள்ளார். கனடாவை சேர்ந்தவர் ஜூலியட் லாமோர். 18 வயதான இவருக்கு பிறந்த நாள் பரிசாக அவரது தாத்தா லாட்டரி சீட்டு வாங்க பணம் கொடுத்துள்ளார். இதையடுத்து, தாத்தாவின் உதவியுடன் ஒன்ராறியோ லாட்டரி மற்றும் கேமிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் lotto 6 -49 […]

You May Like