திருநெல்வேலி மாவட்ட பகுதியில் கார்த்திகை தீபத் திருவிழாவினை நேற்று எல்லோரும் உற்சாகமாக கொண்டாடி வந்தனர். இதனையொட்டி பாளையங்கோட்டை அடுத்த சமாதானபுரத்தில் எழுந்தருளியுள்ள காளியம்மன் கோவிலில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் மதுபோதையில் என்ன செய்கிறோம் என்று தெறியாமல் எரிந்துக்கொண்டிருந்த சொக்கப்பனை தீயினுள் திடீரென குதித்துள்ளார். இதனால் படுகாயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் பற்றி பாளையங்கோட்டை பகுதி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் அருகில் இருந்த மக்கள் சொக்கப்பனை எரிவதனை வீடியோ பதிவு செய்த போது முருகன் தீயில் குதித்த காட்சியும் பதிவாகியுள்ளது. முருகன் தீக்குள் குதிக்கும் வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.