fbpx

பன்றி இதயம் பொருத்தப்பட்ட நபர் 40 நாட்களுக்கு பின் மரணம்..!! மருத்துவர்கள் அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் 40 நாட்கள் உயிர் வாழ்ந்த நிலையில், திடீரென இறந்துள்ளது மருத்துவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அமெரிக்காவின் மேரிலாண்ட் மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்கள் குழு, கடந்த செப்.20ஆம் தேதி இதயம் பழுதடைந்த 58 வயதான லாரன்ஸ் என்பவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை பொருத்தியுள்ளனர். முன்னாள் கடற்படை வீரரான இவரின் இதயம் செயலிழந்த நிலையில், இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

6 வாரங்கள் வரை நலமோடு இருந்த லாரன்ஸ், திங்கள்கிழமை (அக்.30) அன்று உயிரிழந்துள்ளார். “லாரன்ஸ், அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடற்பயிற்சிகள் மேற்கொள்வது, குடும்பத்தோடு நேரம் செலவழிப்பது, சீட்டுக்கட்டு விளையாடுவது என குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறி வந்துள்ளார். ஆரம்ப நாட்களில் அவர் உடல், மறுப்பிற்கான அறிகுறிகளைக் காட்டினாலும் இது வழக்கமான இதய மாற்று அறுவை சிகிச்சையிலும் நடக்கக் கூடியது தான்.

மருத்துவர்களின் முயற்சியால் அவர் அக்.30 வரை உயிர் பிழைத்திருந்தார்” என மேரிலாண்ட் மருத்துவ கல்லூரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் இன்று பெருமளவில் நடைபெற்று வந்தாலும் மனித உறுப்புகள் எளிதில் கிடைக்கக் கூடியது அல்ல. இந்நிலையில், விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்கு ஏற்றாற்போல மரபணு மாற்றம் செய்யப்பட்டு பொருத்தும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

மேரிலாண்ட் மருத்துவமனை மேற்கொள்ளும், பன்றியின் இதயத்தை மனிதர்களுக்கு பொருத்தும் 2-வது அறுவை சிகிச்சை இது. முதல் அறுவை சிகிச்சை, 2022 ஜனவரி 7ஆம் தேதி டேவிட் பெனட் என்பவருக்கு மேற்கொள்ளப்பட்டது. அவர் இரண்டு மாதங்கள் வரை உயிருடன் இருந்தார். இன்னும் இந்த ஆராய்ச்சியில் நீண்ட கால நோக்கில் மேம்பட்ட முடிவுகள் கிடைக்கப் பெறலாம் என நம்பப்படுகிறது.

Chella

Next Post

ஷாக்கிங் நியூஸ்..!! 8 மாத கர்ப்பம்..!! பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

Wed Nov 1 , 2023
மலையாள சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பிரியா. அவருக்கு 35 வயதாகிறது. இந்நிலையில், அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இச்செய்தி ரசிகர்காளிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சக நடிகரான கிஷோர் சத்யா என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘பிரியாவின் அம்மாவும் கணவரும் இந்தத் துயரத்தில் இருந்து எப்படி மீள்வார்கள் என்பது தெரியவில்லை. […]

You May Like