கன்னியாகுமரி மாவட்டம் பகுதியில் உள்ள காற்றாடிமூடியில் வேலம்மாள்(78) என்ற ஓய்வுபெற்ற ஆசிரியை வசித்து வருகிறார். இவருக்கு மகள் பகவதி அம்மாள்(57) மற்றும் இரு மகன்களும் உள்ளனர். தனது வயோதிக காலத்தில் வேலம்மாள் தன்னுடைய மகள் வீட்டில் அவரது குடும்ப உறுப்பினருடன் வசித்து வந்துள்ளார்.
இதனிடையே திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவின் காரணமாக வேலம்மாள் உயிரிழந்துள்ளார். அம்மாவின் இறுதிச்சடங்கு நேற்று நடப்பதாக இருந்த நிலையில் உறவினர்கள் இவரை கண்டு தொடர்ந்து அஞ்சலி வந்து செலுத்திய கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில் தாய் இறந்த சோகத்தில் மனமுடைந்து தொடர்ந்து அழுத மகள் தாயின் சடலத்தின் மீதே சரிந்து விழுந்தார். இதனை தொடர்ந்து உறவினர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துப்போய் சோதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பகவதி அம்மாள் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பகவதி அம்மாள் உடலையும் கொண்டுவந்து வேலம்மாள் உடலின் அருகில் வைத்து வேலம்மாளின் இறுதிச்சடங்கு மட்டும் நேற்று மாலை நடைபெற்றது. மேலும் பகவதி அம்மாளின் மகனான அஜித் வெளிநாட்டில் இருப்பதனால் அவரின் வருகைக்கு பின்பு தான் வேலம்மாளின் உடல் எடுக்கப்படுவதாக உள்ளது. தாய் இறந்த துக்கம் தாங்காமல் மகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.