fbpx

”தயவு செய்து ஏற்றுக்கொள்ளுங்கள்”..!! திடீரென ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த பன்வாரிலால் புரோகித்..!! இதுதான் காரணமா..?

பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், ராஜினமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்தில், எனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும், வேறு சில கடமைகளின் காரணமாகவும் ராஜினாமா செய்கிறேன். தயவு செய்து இந்த கடிதத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பன்வாரிலால் புரோகித், முன்னதாக அசாம், மேகாலயா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஆளுநராகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் 14-வது தமிழ்நாடு ஆளுநராக கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி முதல் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி வரை பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

"உண்மையாக பாதிக்கப்பட்டவர்களை கொச்சைப்படுத்தாதீர்கள்.."! பூனம் பாண்டே ஸ்டண்ட் குறித்து கண்டனம்.!

Sat Feb 3 , 2024
சர்ச்சைக்குரிய நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்தார் என்று செய்தி நேற்று இணையதளத்தில் பரவியது. இதனைத் தொடர்ந்து பலரும் அவரது மறைவிற்காக அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்நிலையில் அவர் வீடியோ வெளியிட்டு உயிரோடு நலமுடன் இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் இந்த வீடியோவில் கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசி இருந்தார். தனது மரணச் செய்தி குறித்து பூனம் பாண்டே வெளியிட்டுள்ள […]

You May Like