fbpx

தயவு செஞ்சி எங்கள வாழ விடுங்க….! கையெடுத்து கும்பிட்ட மனைவி, கணவர் எடுத்த நெகிழ்ச்சி முடிவு, கடைசியில் என்ன நடந்தது தெரியுமா….?

பொதுவாக தன்னுடைய மனைவி வேறு ஒருவரை விரும்புகிறார் என்று தெரிய வந்தால், அவரை தான் விரும்பியவரோடு சேர்த்து வைக்கும் கதை எல்லாம் சினிமாவில் மட்டும்தான் நடக்கும். அது ஒரு சில சமயங்களில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும். ஆனாலும், அப்படி ஒரு சம்பவம் தற்போது நிஜ வாழ்க்கையிலும் நடைபெற்று உள்ளது.

திருமணம் ஆகி ஒரு வருடத்திற்கு பிறகு தன்னுடைய மனைவி வேறொருவரை காதலித்துள்ளார் என்பது தெரிய வந்ததை தொடர்ந்து, அந்த பெண்ணின் கணவர், அந்தப் பெண்ணின் காதலனுக்கு, அந்தப் பெண்ணை திருமணம் செய்து வைத்து, அனுப்பி வைத்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று உள்ளது.

உத்திரபிரதேசத்தில் ஒரு தம்பதிகளுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், திருமணத்திற்கு முன்னரே, இரண்டு வருடங்களாக அந்த பெண் ஒரு நபரை காதலித்து வந்துள்ளார். அந்த நபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பிறகும், தன்னுடைய காதலனை மறக்க முடியாத நிலையில், கணவன் இல்லாத நேரத்தில், அடிக்கடி தன்னுடைய காதலனை வீட்டிற்கு வரவழைத்து, உல்லாசமாக இருந்துள்ளார் அந்த பெண்மணி. இது அக்கம் பக்கத்தில் இருக்கும் நபர்களுக்கு தெரிய வந்ததால், அந்தப் பெண்ணின் காதலரை கையும், களவுமாக பிடித்துள்ளனர்.

அதே நேரம், அந்தப் பெண் தன்னுடைய கணவனிடம் நான் உங்களோடு வாழ முடியாது, தயவு செய்து என்னை என் காதலனோடு சேர்த்து வையுங்கள் என்று கையெடுத்து கும்பிட்டுள்ளார். இதனால், அந்த பெண்ணின் கணவர் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், பின்னர் நிதர்சன உண்மையை உணர்ந்து கொண்டு, அந்த பெண்ணை அவருடைய காதலனோடு சேர்த்து வைத்து, திருமணம் செய்து வைத்து, அந்த பெண்ணின் காதலர் வந்த இருசக்கர வாகனத்திலேயே இருவரையும் அனுப்பி வைத்த சம்பவம் அந்த பகுதியில், பரபரத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது

.

Next Post

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு...! 10-ம் வகுப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்...!

Mon Sep 25 , 2023
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Driver (Ordinary Grade) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என இரண்டு காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 27க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையின் 3 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். மேலும் பணிக்கு கல்வித்தகுதியாக அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி […]

You May Like