fbpx

நடு ரோட்டில் வெட்டிக் கொல்லப்பட்ட பாமக பிரமுகர்.. அச்சத்தில் மக்கள்.!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகே சோழபுரம் பகுதியைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் என்ற 53 வயது நபர் பாமக முன்னாள் பேரூர் தலைவராக பதவி வகித்து வருகின்றார். இவருக்கு 42 வயதில் வனிதா என்ற மனைவியும், ஸ்ரீமதி, ஸ்ரீ ராம் என்ற பிள்ளைகளும் இருக்கின்றனர்.

திருசம்பந்தத்திற்கும் ராஜேந்திரன் என்பவருக்கும் பல ஆண்டுகளாக நில தகராறு ஏற்பட்டு வந்தது. சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட தகராறு திருஞானசம்பந்தத்தை ராஜேந்திரன் குடும்பத்துடன் சேர்ந்து தாக்கி இருக்கிறார். இது குறித்து போலீசில் திருஞான சம்பந்தம் புகார் கொடுத்ததன் பேரில் ராஜேந்திரன் மற்றும் அவருடைய மகன் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் ஜாமினில் தற்போது வெளியில் வந்த நிலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த திருஞான சம்பந்தத்தை வழிமறித்து சரமாரியாக அறிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடு உள்ளனர்.

அக்கம் பக்கத்தினர் திருஞான சம்பந்தத்தை விட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Rupa

Next Post

கையில் குழந்தையுடன் தகராறு செய்த தாய்.. கீழே விழுந்த குழந்தைக்கு ஏற்பட்ட கொடுமை.!

Wed Jan 11 , 2023
பீகார் மாநிலத்தில் இருக்கும் ஜெகனாபாத் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையில் நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அங்கிருக்கும் ஒரு பெண் 18 மாத கைக்கு குழந்தையை தனது மடியில் வைத்துக் கொண்டு சண்டை போட்டுள்ளார். அப்போது அந்த கைக்குழந்தை தரையில் விழுந்துள்ளது. அது தரையில் விழுந்தவுடன் உயிரிழந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால் குழந்தையின் தந்தை எதிர் தரப்பினர் தடிகள் மற்றும் கற்களை கொண்டு தாக்கியதால்தான் கைக்குழந்தை உயிரிழந்த இருப்பதாக தெரிவித்துள்ளனர். […]

You May Like