மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சியையும், அதன் சின்னமான கட்சியின் வில் அம்பையும் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் சுமார் எட்டு மாதங்களுக்கு பிறகு, இந்தியத் தேர்தல் ஆணையம் ஏக்நாத் ஷிண்டே அணி, சிவசேனா என்ற கட்சியின் பெயரையும் வில் அம்பு சின்னத்தையும் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இது மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் அதன் 78 பக்க உத்தரவில், சிவசேனாவின் தற்போதைய அரசியலமைப்பு “ஜனநாயக விரோதமானது” என்று எடுத்துக்காட்டி உள்ளது.

மகாராஷ்டிராவில் 2022-ம் ஜூன் மாதம் சிவசேனா கட்சியின் ஆட்சி கவிழ்ந்தது. அக்கட்சியின் மற்றொரு தரப்பான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்எல்ஏக்கள் பெரும்பான்மையை நிரூபித்ததன் அடிப்படையில் புதிய அரசு பதவியேற்றது. ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவியேற்றார். இவரது தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது.
மாநில முதல்வராக ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகிய 2 தரப்பும் கட்சியின் வில் மற்றும் அம்பு சின்னத்திற்காக வழக்குகள் தொடுத்தும், தேர்தல் ஆணையத்தை நாடியும் வந்தன. இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சியையும், அதன் சின்னமான கட்சியின் வில் அம்பையும் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதோடு கட்சியின் விதிகள் மற்றும் பெரும்பான்மையின் அடிப்படையில் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.