fbpx

மிஸ் பண்ணிடாதீங்க..! மார்ச் 3-ம் தேதி தான் கடைசி நாள்… அஞ்சல் அலுவலகம் முக்கிய அறிவிப்பு…!

முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னைக் கோட்டம், அஞ்சல் ஆயுள் காப்பீடு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்த இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் கீழ்க்காணும் தகுதியை பெற்றிருப்பின் செயின்ட் தாமஸ் மௌன்ட் தலைமை அஞ்சலகம், சென்னை 600016-ல் உள்ள அலுவலகத்தில் 3.03.2024 அன்று 10.00 மணிக்கு நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

கல்வி தகுதி குறைந்தது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18-வயதிலிருந்து இருக்க வேண்டும். சுய தொழில் செய்யும் / வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட தகுதியுடையவர்கள் மூன்று புகைப்படத்துடன் (பாஸ்போர்ட்அளவு), அசல் மற்றும் இரண்டு நகல் -வயதுச்சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்றுடன் அணுகவும். நேர்காணலுக்குப் பின் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு தேசிய சேமிப்பு பத்திரம் (பணப் பாதுகாப்பு பத்திரமாக) வழங்க வேண்டும். இந்த நேர்காணல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை முகவர்கள் மூலம் விற்பனை செய்வதற்காக நடத்தப்படுகிறது. முகவர்களாக தேர்ந்து எடுக்கப்படுபவர்கள் பிடிக்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

Vignesh

Next Post

EPS-A.Rasa Challenge: தொடர்ந்து இபிஎஸ்-ஐ சீண்டும் ஆ.ராசா!… மோடியை எதிர்த்தால் சிறைக்குதான் செல்வார்!

Tue Feb 20 , 2024
EPS-A.Rasa Challenge: தேர்தலுக்குப் பிறகு மோடிக்கு அதிமுக ஆதரவளிக்காது என்று சொல்ல எடப்பாடிக்கு தைரியம் உள்ளதா என ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார். உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் என்ற கரூர் நாடாளுமன்ற தொகுதி பரப்புரை கூட்டம், கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய ஆ.ராசா, “சர்வதிகாரியாள் நடத்தப்படும் கொடுங்கோல் ஆட்சி பாசிசம் என்பதாகும்.இன்று இந்தியாவிலும் கொடுங்கோலாட்சியான பாசிசம் பரவ முயலுகிறது. அதனை எதிர்த்து போராடும் தலைவனாக நிற்பவர் தான் […]

You May Like