fbpx

அஞ்சல் ஓய்வூதியம் பெறும் நபர்கள் மே 10-ம் தேதிக்குள் இதை செய்து முடிக்க வேண்டும்…!

அஞ்சலக ஒய்வூதிய குறை தீர்க்கும் முகாம் மே மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌.

அகில இந்திய அஞ்சலக ஒய்வூதிய குறை தீர்க்கும் முகாம் 17.05.2023 அன்று பகல் 11:00 மணியளவில் சென்னையில் உள்ள தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் காணொலிக்காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது.

ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் சம்மந்தப்பட்ட குறைகளை முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம் சென்னை என்கிற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ (அ) bgt.tn@indiapost.gov.in என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ 10.05.2023 மதியம் 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் பெறப்பட்ட ஓய்வூதியம் தொடர்பான மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு காணொலிக்காட்சிக்கான இணைப்பு உரிய நபர்களுக்கு அனுப்பப்படும் என்று முதன்மை அஞ்சல் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

மாஸ் அறிவிப்பு...! உதவித்தொகை பெற ஆதார் இணைத்த வங்கி கணக்கு கட்டாயம்...! முழு விவரம் இதோ...

Sat Apr 29 , 2023
ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ கல்வி உதவித்தொகை பெற மாணாக்கர்கள்‌ ஆதாருடன்‌ இணைப்புடன்‌ கூடிய வங்கி கணக்கு துவங்க வேண்டும். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; 2022-2023 ஆம்‌ கல்வியாண்டில்‌ ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக, ஆதார்‌ இணைப்புடன்‌ கூடிய வங்கி கணக்கு, இல்லாத மாணவர்களுக்கு, அஞ்சல்‌ துறையின்‌ கீழ்‌ செயல்படும்‌ இந்தியா போஸ்ட்‌ பேமெண்ட்ஸ்‌ வங்கியின்‌ மூலம்‌, பள்ளிகளிலேயே ஆதார்‌ இணைப்புடன்‌ கூடிய […]

You May Like