ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் செமஸ்டர் தேர்வுகளின் தேதி மீண்டும் மாற்றப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணா பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பட்டது. இதையடுத்து மாண்டஸ் புயல் காரணமாக சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டது.
அதன்படி, டிசம்பர் 9-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 24-ம் தேதியும், டிசம்பர் 10-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 31-ம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருந்த நிலையில் மீண்டும் தேதியை மாற்றி அறிவித்துள்ளது. இந்நிலையில், பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வுகள் ஜனவரி 19 மற்றும் ஜனவரி 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.