fbpx

பிரசவத்திற்கு பின்னர் பெண்கள் எத்தனை மாதத்திற்கு பிறகு உடலுறவில் ஈடுபடலாம்…..?

எப்போதும் ஆண்களை விட பெண்களுக்குத்தான் உடலுறவு வாழ்க்கையில் அதிக ஈடுபாடு இருக்கும் என்று பலர் சொல்லி நாம் கேட்டிருப்போம்.. ஆனால் பிரசவத்திற்கு பிந்தைய காலகட்டத்தில் அது முற்றிலுமாக மாறி போகும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

அதாவது, பிரசவத்திற்கு பின்னர் குறைந்தபட்சம் 6 வார காலத்திற்கு தம்பதிகள் உடலுறவில் ஈடுபடாமல் இருப்பது நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். அதாவது, ஒரு பெண் பிரசவத்தின் போது அளவு கடந்த வலியை அனுபவித்து ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறாள். இன்னும் சொல்லப்போனால் பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறவி என்று சொல்லப்படுகிறது.

அப்படிப்பட்ட பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு இரத்தப்போக்கு மற்றும் திசுக்கள் பிறப்புறுப்பில் இருந்து வெளியேறும் என்று கூறப்படுகிறது. இது மாதவிடாய் போன்ற செயல்பாடு என்பதால், இது போன்ற ஆலோசனைகள் மருத்துவர்களால் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. அத்துடன் பெண்களின் பிறப்புறுப்பை சுற்றி இருக்கின்ற திசுக்கள் பிரசவத்திற்கு பிறகு வறண்டு போகும் தன்னை கொண்டவையாக காணப்படும். ஆகவே பெண்களுக்கு தொற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அதாவது, ஒரு பெண் தாய்ப்பால் கொடுக்கும் போது உடலில் புரோலாக்டின் என்ற ஒருவித ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த ஹார்மோனின் அதிக அளவு குறைந்த கருவுறுதலை குறிப்பதாக உள்ளது. ஆகவே தாய்ப்பால் கொடுக்கும் பெண் கர்ப்பமாக இருக்க இயலாது என்று நம்பப்படுகிறது.

பால் கொடுக்கும் தாய்மார்களின் அண்டவிடுப்பின் செயல்முறை சராசரியாக ஆறு வாரங்களில் ஆரம்பமாகிறது. இதனால் தாய்ப்பால் வழங்கினாலும் ஒரு பெண்ணால் கர்ப்பம் அடைய முடியும். ஆகவே பிரசவத்திற்கு பிறகு தாய் பாலூட்டினால் தம்பதிகள் உடலுறவின்போது கருத்தடை பயன்படுத்துவது நல்லது.

ஒரு பெண்ணுக்கு தூக்கமின்மை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறை என்பது பாலியல் ஆசையை வெகுவாக பாதிப்படைய வைக்கிறது. சில ஹார்மோன் மாற்றங்கள் பிறப்புறுப்பில் வறட்சி மற்றும் வலியை ஏற்பட செய்கின்றது.. இது ஒரு பெண்ணின் லிபிடோவை பாதிக்கின்றது. நல்ல தூக்கம் மற்றும் ஆரோக்கியமான, சத்தான உணவு முறைகள் மூலமாக ஒரு பெண்ணின் பாலுணர்வை அதிகரிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

உடலுறவுக்கு முன்னும், பின்னும், பிறப்புறுப்பின் சுகாதாரத்தை பாதுகாப்பது மிகவும் அவசியம். இதற்கு ஒரு பெண்ணின் பிறப்புறுப்பு பகுதியை நீர் மற்றும் சோப்பு போன்றவற்றை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கைகளை கழுவுவது, உடலுறவுக்கு பிறகு சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட சுகாதார குறிப்புகள் தொற்று நோயை தடுக்க உதவிகரமாக இருக்கும்.

மேலும் பெண்கள் சிறுநீரை வெகு நேரம் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இயலாது. இது சிறுநீர் தொற்று அபாயத்தை அதிகரிப்பதாக உள்ளது. மேலும் பாலியல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை உண்டாக்குகிறது.

ஒரு பெண் பிரசவத்திற்கு பிறகான காலத்தில் அந்த பெண்ணின் கணவனின் ஆதரவை நாடுகிறாள். பிரசவத்திற்கு பிறகு பெரும்பாலும் பெண்களின் உடல் எடை அதிகரிப்பு, உள்ளிட்ட பல உடல் மாற்றங்களை சந்திக்க நேரலாம். இது உடலுறவில் ஈடுபடும்போது தம்பதிகள் இடையே சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தலாம். ஆனால் ஒரு பெண்ணின் ஆண் துணையின் ஆதரவு பிரசவத்திற்கு பிறகான காலங்களில் பெண்ணின் மனதளவிலும் சரி, உடல் அளவிலும் சரி மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கும்

அது பிரசவத்திற்கு பிந்தைய காலமோ அல்லது முந்தைய காலமோ எந்த காலமாக இருந்தாலும், எப்போதும் பெண்கள் தங்களுடைய துணையின் ஆதரவை நாடுவது இயல்பான ஒன்றுதான். அனைத்து விஷயங்களிலும் தங்களுடைய துணையின் ஆதரவு இருந்து விட்டால் நாம் வெற்றி பெற்று விடலாம் என்ற ஒரு நம்பிக்கை பெண்கள் மனதிலும் சரி, ஆண்கள் மனதிலும் சரி வெகுவாக காலூன்றி இருக்கிறது அதுதான் உண்மையும் கூட.

Next Post

உடலில் நோய் இன்றி வாழ்வதற்கு ஆரோக்கிய குறிப்புகள்…..!

Wed Aug 2 , 2023
பொதுவாக ஒருவர் உடலில் எந்தவித நோயுமின்றி வெகு காலம் வாழ்ந்து மடிந்தால் நாம் சொல்லும் ஒரே விஷயம் அவன் ஜாதகம் அப்படி, ராசி அப்படி, அவன் பிறந்த நேரம் அப்படி என்று சொல்வதுண்டு. ஆனால் இவையெல்லாம் கடந்த ஒரு விஷயம் உள்ளது. அதனை யாரும் கருத்தில் கொள்வதில்லை. நாம் எப்போதும் உடலில் நோய் இன்றி ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமான, சுகாதாரமான உணவு முறை மிக முக்கிய பங்கு […]

You May Like