fbpx

முதல்வர் மு.க.ஸ்டாலின் கையை பிடித்து கதறி அழுத பிரேமலதா..!! காண்போரை கலங்க வைத்த காட்சி..!!

சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை காலமானார். இதனையடுத்து, சென்னை சாலிகிராமத்தில் அவரது உடல் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பொதுமக்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். சாலிகிராமமே கண்ணீரில் மூழ்கிய நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

முதல்வரை கண்டதும் பிரேமலதா விஜயகாந்த் கதறி அழுதார். அவரது கையைப் பற்றிக் கொண்டு முதல்வர் ஆறுதல் கூறினார். முதல்வருடன் அமைச்சர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். அப்போது தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உடலை பொது இடத்தில் அடக்கம் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்தாக தகவல் வெளியாகியுள்ளது.

Chella

Next Post

தலைவர்களுக்கு எமனாக மாறிய டிசம்பர் மாதம்..!! பெரியார் To விஜயகாந்த் வரை..!!

Thu Dec 28 , 2023
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலமானார். அவரது மறைவு செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவையும் சேர்த்து பல தலைவர்கள் காலமாகியுள்ளதும், சுனாமி போன்ற சோக நிகழ்வுகளும் டிசம்பர் மாதத்தில் தான் நிகழ்ந்துள்ளன. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், கடைசி இந்திய கவர்னர் ஜெனரலுமான ராஜாஜி என்றழைக்கப்பட்ட ராஜகோபாலாச்சாரி 1972ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 25ஆம் நாளில் மறைந்தார். திராவிடர் கழகத்தின் நிறுவனத் தலைவர் பெரியார் […]

You May Like