fbpx

ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் முர்மு பங்கேற்கின்றார்…. இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் செல்கின்றார்….

ராணி எலிசபெத் காலமானதை அடுத்து அவரது இறுதிச் சடங்கிற்கு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் முர்மு பங்கேற்க உள்ளார்.

ராணி எலிசபெத் தனது 96ம் வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரா கோட்டையில் கடந்த 8ம் தேதி காலமானார். இதையடுத்து அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் தனி விமானம் மூலம் லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து ஏராளமான மக்கள், விஐபிக்கள் என மகாராணிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மகாராணியின் இறுதிச்சடங்கு வரும் 19ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து தலைவர்களுக்கு 500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா , நியூசிலாந்து , ஆஸ்திரேலியா பிரதமர்களும் இறுதிச் சடங்கில் பங்கேற்பார்கள்.

இந்தியாவில் இருந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மகாராணியாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் 17ம் தேதி இந்தியாவில் இருந்து லண்டன் புறப்படுகின்றார். அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்து 19 ம் தேதி இறுதிச் சடங்கில் பங்கேற்ற பின்னர் மீண்டும் இந்தியா திரும்புகின்றார்…

Next Post

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு திடீர் பிரசவ வலி..! இரு உயிர்களை காப்பாற்றிய மருத்துவ மாணவி..!

Wed Sep 14 , 2022
விரைவு ரயிலில் பயணம் செய்த கர்ப்பிணியின் பிரசவத்திற்கு உதவிய இறுதி ஆண்டு மருத்துவ மாணவியின் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகுளத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் செவ்வாய்க்கிழமை அன்று செகந்திராபாத் துரந்தோ விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார். அவர் பயணம் செய்த அந்தப் பெட்டியில் மருத்துவ மாணவி ஒருவரும் பயணம் செய்துள்ளார். இந்நிலையில், அந்த விரைவு ரயில் அனாகபள்ளி ரயில் நிலையத்தை அடைவிருந்தபோது, அந்த கர்ப்பிணிக்கு திடீரென […]
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு திடீர் பிரசவ வலி..! இரு உயிர்களை காப்பாற்றிய மருத்துவ மாணவி..!

You May Like