fbpx

வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!

வாராணசி மக்களவைத் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை பிரதமர் நரேந்திர மோடி இன்று தாக்கல் செய்தார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி துவங்கி வருகிற ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. நாடு முழுவதும் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், 5வது கட்டத் தேர்தல் வருகிற மே 20ம் தேதி நாடு முழுவதும் உள்ள 49 தொகுதிகளில் நடைபெற உள்ளது. 6ம் கட்டமாக 58 தொகுதிகளுக்கும், 7ம் கட்டமாக 57 தொகுதிகளில் ஜூன் 1ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

7வது மற்றும் இறுதிக் கட்ட தேர்தலில், உத்தர பிரதேசத்தில் உள்ள வாராணசி தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இதை முன்னிட்டு வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முன்னதாக கால பைரவர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி, வாகனப் பேரணியில் ஈடுபட்டவாறே பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Post

நீதிமன்றத்தில் ஆஜரானார் எடப்பாடி பழனிசாமி..!! என்ன காரணம் தெரியுமா..? பரபரப்பு..!!

Tue May 14 , 2024
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது தன்னை பற்றி அவதூறாக பேசியதாக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் ஆஜரானார். மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளுக்கும் முதற்கட்டத்திலேயே கடந்த மாதம் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. முன்னதாக, மத்திய சென்னை தொகுதி தேமுதிக […]

You May Like