fbpx

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து…

திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட கனிமொழிக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

திமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இதில், பொதுக்குழு உறுப்பினர்கள் 2,600 பேர் உட்பட 4 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் தணிக்கை குழு உறுப்பினர்கள் இந்த பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தலைவர் பதவிக்கு முக.ஸ்டாலின், பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு ஆகியோரை தவிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யததால் அவர்கள் மீண்டும் அந்த பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அவர்களை திமுக உட்கட்சி தேர்தல் ஆணையர் ஆறுகாடு வீராசாமி அறிவித்தார். அப்போது நிகழ்ச்சி மேடைக்கு சென்ற முதலமைச்சர் முக.ஸ்டாலின், அங்கு வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் உறுப்பினர்களின் ஆராவார முழக்கத்துடன் திமுக தலைவராக அவர் 2-வது முறை பொறுப்பெற்று கொண்டார். இதேபோல், பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு ஆகியோரும் பொறுப்பேற்று கொண்டனர்.

மேலும், மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிலவி வந்த துணைப் பொதுச்செயலாளராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அறிவிக்கப்பட்டார். அவரை கர்ஜனை மொழி கனிமொழி வருக என முக..ஸ்டாலின் மேடைக்கு அழைத்தார். மேலும் ஐ.பெரியசாமி, பொன்முடி, ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரும் துணைப் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டனர். மேலும் திமுக தணிக்கைக்குழு உறுப்பினர்களாக முகம்மது சகி, பிச்சாண்டி, வேலுசாமி, சரவணன் தேர்வு செய்யப்பட்டனர். முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு மீண்டும் நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் திமுகவின் 15வது பொதுக்குழுவில் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட கனிமொழி கருணாநிதி அவர்களுக்கு இந்திய‌ பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ஏற்கனவே கனிமொழி கருணாநிதி அவர்களின் பிறந்தநாளின் போதும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் தனது வாழ்த்துகளை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Kathir

Next Post

நயன்தாராவுக்கு 9 மாதம்...!! குண்டை தூக்கிப்போட்ட மருத்துவர்..!! இது எப்போ நடந்துச்சு..?

Sun Oct 9 , 2022
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வரும் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும், திருமணம் முடிந்த சில நாட்களில் தாய்லாந்து ஹனிமூனும் சென்றனர். அதன்பின் ஒரு வாரம் கழித்து ’ஜவான்’ படத்தின் ஷூட்டிங்கிலும் கலந்து கொண்டார். கடந்த மாதம் ஸ்பெயின் சுற்றியுள்ள நாடுகளுக்கு மீண்டும் ஹனிமூன் சென்று ரொமான்ஸ் புகைப்படங்களை பகிர்ந்தும் வந்தார் நயன்தாரா. தற்போது இந்தியா […]

You May Like