fbpx

கைதியை மிரட்டி ஓரினச்சேர்க்கை..!! போக்சோவிலிருந்து விடுவிக்க ரூ.50,000..!! அட்டூழியம் செய்த இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே அயிரூர் பகுதியைச் சேர்ந்த 29 வயதான வாலிபர் ஒருவர் கடந்த ஆண்டு சமூக வலைதளம் மூலம் 17 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை நைசாக பேசி நேரில் வரவழைத்த வாலிபர், மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்று சிறுமியை கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசனில் கைதான வாலிபரிடம் விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் வாலிபர் மீது இன்ஸ்பெக்டர் ஜெயசனிலுக்கு விபரீத ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயசனில் அந்த வாலிபரை தன்னுடைய குடியிருப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அவரை மிரட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். மேலும், போக்சோ வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.50 ஆயிரம் பணம் வேண்டும் என்று கூறி வாலிபரை மிரட்டி அவரிடமிருந்து பணத்தையும் பறித்துள்ளார்.

ஆனால், பணத்தை வாங்கிய பிறகு வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தார். இந்நிலையில், போக்சோ வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் வாலிபர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது தன்னை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் ஜெயசனில் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜெயசனில் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அவர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து ஜெயசனில் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதற்கிடையே, வர்க்கலா பகுதியைச் சேர்ந்த சில ரிசார்ட் உரிமையாளர்கள் மீதும் இன்ஸ்பெக்டர் ஜெயசனில் பொய் வழக்குப்பதிவு செய்ததாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து திருவனந்தபுரம் மாவட்ட தனிப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இவ்வாறாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளில் சிக்கிய இன்ஸ்பெக்டரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து கேரள டிஜிபி ஷேக் தர்வேஷ் சாகிப் உத்தரவிட்டுள்ளார்.

Chella

Next Post

தாய் இறந்த தூக்கம் தாங்காமல் கதறிய கர்ப்பிணி பெண்…..! பின்பு எடுத்த விபரீத முடிவு…..!

Sat Aug 5 , 2023
எப்போதும் நமக்கு பிடித்தவர்களோ அல்லது நம் மனதிற்கு நெருக்கமானவர்களோ, நம்மை நன்றாக புரிந்து கொண்ட நபரோ, நம்மை விட்டு பிரிந்து செல்லும்போது, நம்முடைய மனநிலை இருக்கும் நிலை என்ன என்பதை நம்மால் அவ்வளவு எளிதில் வெளியே சொல்லிவிட முடியாது. ஆனால், அதையெல்லாம் கடந்து தான் வர வேண்டும். அதை கடந்து வரும்போது நாம் பல்வேறு மன மாற்றங்களை சந்திப்போம். பல்வேறு துக்ககரமான நிகழ்வை அனுபவிப்போம். அதெல்லாம் வாழ்க்கையில் ஒருவித அனுபவம். […]

You May Like