fbpx

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்.. ஸ்கேன் செய்த போது காத்திருந்த அதிர்ச்சி.!

சென்னை மீனம்பாக்கம் பகுதியில் ராஜன் என்பவர் தனது 32 வயது மாணவி ஸ்ரேயா பானுவுடன் வசித்து வந்துள்ளார். கர்ப்பமாக இருந்த ஸ்ரேயா பானுவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதில் ஆண் குழந்தை பிறந்தது. அப்பொழுது, குழந்தை இறந்தே பிறந்துள்ளது. எனவே அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவர்களின் அலட்சியம் தான் எங்களது குழந்தை உயிரிழந்ததற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆகவே சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மருத்துவமனைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட துவங்கியுள்ளனர்.

இது குறித்து, மருத்துவர்கள் அந்த பெண்ணுக்கு, “அதிக ரத்த அழுத்த பிரச்சனை இருக்கிறது. இதனால் வரை தனியார் மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உடனே ஸ்கேன் செய்து பார்த்தபோது குழந்தைக்கு இதயத்துடிப்பு இல்லை. இதை அவர்களிடம் கூறிவிட்டு தான் நாங்கள் குழந்தையை வெளியே எடுத்தோம். இப்போது எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். அத்துடன் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே குழந்தை இறந்ததற்கான சான்று இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளனர்.

Baskar

Next Post

ஓபிஎஸ் வீட்டிற்கு முக்கிய ஆவணங்களை தேடி வந்த கொள்ளையர்கள்..?? விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!!

Sun Oct 16 , 2022
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான பண்ணை வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு சொந்த ஊரான பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டியில், அவருக்கு பண்ணை வீடு ஒன்று உள்ளது. 10 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் கொண்ட இந்த வீட்டில் எப்போதும் பாதுகாவலர்கள் இருப்பதுடன், காவலுக்காக நாய்களும் உள்ளன. இங்கு கட்சி நிர்வாகிகளின் சந்திப்பு, ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், பண்ணை வீட்டில் வெள்ளிக்கிழமை இரவில் திருட்டு […]
ஓபிஎஸ் வீட்டிற்கு முக்கிய ஆவணங்களை தேடி வந்த கொள்ளையர்கள்..?? விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!!

You May Like