fbpx

பொதுமக்கள் கவனத்திற்கு..! இன்று சென்னை கடற்கரை – தாம்பரம் இடையிலான மின்சார ரயில் சேவைகள் ரத்து..!

தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சென்னை கடற்கரை – தாம்பரம் இடையிலான மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னையை அடுத்த தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நாளை (செப்.14) காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை சென்னை கடற்கரை – தாம்பரம் இடையிலான மின்சார ரயில் சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நேரங்களில் பயணிகளின் வசதிக்காக 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் இடைவெளியில் சென்னை கடற்கரை – பல்லாவரம் இடையே இருமார்க்கத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து காலை 8.35 மணிக்கு முதல் சிறப்பு ரயில் புறப்பட்டு 9.25 மணிக்கு பல்லாவரம் சென்றடையும்.

32 மின்சார ரயில் சேவைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் இயக்கப்படும். கடைசி ரயில் பல்லாவரத்தில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.25 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும். பிறகு வழக்கமான மின்சார ரயில் சேவை நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Public attention..! Electric train services between Chennai Beach and Tambaram canceled today..!

Kathir

Next Post

உணவுப்போட்டி!. இட்லி சாப்பிடும்போது மூச்சுத்திணறி ஒருவர் பலி!. ஓணம் கொண்டாட்டத்தில் சோகம்!

Sun Sep 15 , 2024
Man dies while eating idli in Palakkad, here's what happened

You May Like