fbpx

பொது இடங்கள், கடற்கரைகளில் கூட்டம் கூட தடை..!! வீடுகளில் குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடுங்கள்..!! காவல்துறை எச்சரிக்கை

புத்தாண்டை முன்னிட்டு நாளை மறுநாள் இரவு பொது இடங்களிலும் கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டுமென காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாளை மறுநாள் நள்ளிரவு பொதுமக்கள் மோட்டார் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். இதேபோல் நாளை மறுநாள் இரவும், புத்தாண்டின் போதும் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.

பொது இடங்கள், கடற்கரைகளில் கூட்டம் கூட தடை..!! வீடுகளில் குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடுங்கள்..!! காவல்துறை எச்சரிக்கை

மேலும், புத்தாண்டின் போது பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் குறித்த விவரங்களை காவல்துறைக்கு பொதுமக்கள் தெரியப்படுத்த வேண்டும். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும். நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை. வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது. புத்தாண்டை முன்னிட்டு சுமார் 90 ஆயிரம் காவல்துறையினர், 10 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வாகனச் சோதனை தமிழ்நாடு முழுவதும் நடைபெறும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

கம்போடியா சூதாட்ட விடுதியில் தீ விபத்து - 10 பேர் பலி

Thu Dec 29 , 2022
தாய்லாந்து எல்லையில் உள்ள கம்போடியாவில் சூதாட்ட விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது. சுமார் 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அங்கு தங்கி இருந்த நிலையில் நேற்று நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவியதால், விடுதியில் தங்கியிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். சிலர் விடுதியின் ஜன்னல் வழியாக வெளியே குதித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முடியாமல் திணறினர். […]

You May Like