அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளன. ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் தான், போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால், சம்பளம் கிடையாது என எச்சரித்துள்ளது. மேலும், மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ எடுக்கக் கூடாது என்றும், காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராத ஊழியர்களின் விவரங்களை சேகரிக்கவும் தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.