fbpx

பழனிசாமி To பாஜக.. புகழேந்தி கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்.!

ராசிபுரம் அருகே தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, ” சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மழை நீர் வடிகால் வாரியம் அமைக்க ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன. அந்த நிதியை பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் விசாரிப்பாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் கன மழையால் சென்னை பெருநகரம் முழுவதும் வெள்ளதில் மூழ்கி, மழை நீரால் அனைத்து பகுதியும் சூழ்ந்தது. சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் வாரிய அமைக்க ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் முழுமையாக செயல்படுத்தாமல் இருப்பதால் மழை நீர் தேங்கியுள்ளது.

கோடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை ஆகிய வழக்குகளில் பழனிசாமி இன்னும் விசாரிக்கப்படவில்லை. ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவின் பொது செயலாளர் பதவி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவர்களை தவிர மற்ற யாருக்கும் கிடையாது.

அதிமுக பிரிந்து இருக்கின்ற நிலையில் தற்போது தேர்தல் வந்தால் இதுவரை சின்னமாக இருந்த இரட்டை இலை சின்னம் கூட கிடைப்பது சிரமம் தான். இன்னும் சில தினங்களில் முன்னாள் முதல்வர் பழனிச்சாமியோடு இருப்பவர்கள் அனைவரும் விரைவில் பாஜகவோடு வந்து இணைய உள்ளார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Baskar

Next Post

இன்றும் நாளையும் 16 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை!!

Sat Nov 5 , 2022
தமிழ்நாடு, புதுச்சேரியில் 16 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 5 நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வரும் நிலையில் தென் மாவட்டங்களில் நேற்று முதல் வெளுத்து வாங்கி வருகின்றது. திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தேனி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இன்றும் நாளையும் […]

You May Like