புல்வாமா தாக்குதல் வீரமரணம் அடைந்தவர்களுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், வீரமரணம் அடைந்தவர்களுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையின் புல்வாமா பகுதியில், கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ராணுவ வாகனங்கள் அணிவகுத்து சென்றபோது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். ராணுவத்தைச் சேர்ந்த 78 வாகனங்கள் அணிவகுத்து சென்றபோது, அதில் ஒரு பேருந்தின் மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் திடீரென மோதியது. மோதிய வேகத்தில் காருடன் பேருந்தும் வெடித்து சிதறி தீப்பிடித்தது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலை நடத்திய நபர், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த அதிர் அகமது தார் என்று அடையாளம் காணப்பட்டது. இந்த தாக்குதலின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ”புல்வாமாவில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நான் வீரவணக்கம் செலுத்துகிறேன். நமது தேசத்துக்கான அவர்களின் சேவை மற்றும் தியாகம் என்றென்றும் நினைவுகூரப்படும்” என்று தெரிவித்துள்ளார்.