fbpx

பஞ்சாபில் ராச்சத கன்டெனர் லாரி கவிழ்ந்துவிபத்து .. அடியில் சிக்கிக் கொண்ட கார்களில் 3 பேர் பலி …..

பஞ்சாப் அருகே 18 சக்கரங்கள் கொண்ட ராச்சத கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் அடியில் சிக்கிக் கொண்ட கார்களில் பயணித்த 3 பேர் பறிதாபமாக உயிரிழந்தனர்.

பஞ்சாப் அருகே சண்டிகர் – பாகவரா தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அங்குள்ள திருப்பத்தில் வேகமாக திரும்பியபோது கன்டெய்னர் லாரி கவிழந்தது. இதனிடையே அடுத்தடுத்து வந்த வாகனங்கள் கன்டெய்னர் லாரி மீது மோதியது. சில கார்கள் கன்டெய்னர் லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்டது. இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி மனதை பதை பதைக்க வைக்கின்றது.

இந்த பயங்கரமான கார் வித்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு குழந்தை உள்பட தாய், தந்தை என மூன்று பேருமே உயிரிழந்தனர். மற்றொரு காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசாமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் பெருந்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸ் கன்டெய்னர் ஓட்டுனர் மனோஜை கைது செய்துள்ளது.

Next Post

பஸ்ஸை திருடி காதலியை சந்திக்க சென்ற இளைஞரால் பரபரப்பு...!

Tue Sep 13 , 2022
இலங்கை பிலியந்தலை பேருந்து பணிமனையில் நேற்று இரவு அரசு பேருந்து டிரைவர் பேருந்தை நிறுத்திவிட்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை காண டிப்போவிற்கு சென்றார். மேலும் சிலர் உணவு வாங்க சென்றனர். திரும்பி வந்து பார்த்த போது, அங்கு நிறுத்தி வைத்திருந்த பேருந்து காணாமல் போனதை கண்ட ஓட்டுனர் பிலியந்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது கெஸ்பேவ – பிலியந்தலை சந்திப்புக்கு […]

You May Like