பஞ்சாப் அருகே 18 சக்கரங்கள் கொண்ட ராச்சத கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் அடியில் சிக்கிக் கொண்ட கார்களில் பயணித்த 3 பேர் பறிதாபமாக உயிரிழந்தனர்.
பஞ்சாப் அருகே சண்டிகர் – பாகவரா தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அங்குள்ள திருப்பத்தில் வேகமாக திரும்பியபோது கன்டெய்னர் லாரி கவிழந்தது. இதனிடையே அடுத்தடுத்து வந்த வாகனங்கள் கன்டெய்னர் லாரி மீது மோதியது. சில கார்கள் கன்டெய்னர் லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்டது. இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி மனதை பதை பதைக்க வைக்கின்றது.
இந்த பயங்கரமான கார் வித்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு குழந்தை உள்பட தாய், தந்தை என மூன்று பேருமே உயிரிழந்தனர். மற்றொரு காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசாமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் பெருந்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸ் கன்டெய்னர் ஓட்டுனர் மனோஜை கைது செய்துள்ளது.