சீமான் மீது திருமண மோசடி, கட்டாய கருக்கலைப்பு உள்ளிட்ட புகார்களைத் தெரிவித்தவர் நடிகை விஜயலட்சுமி. 12 ஆண்டுகளுக்கு முந்தைய புகாரை தூசு தட்ட வேண்டும் என மீண்டும் புகார் அளித்தார். இப்புகார் தரும் போது விஜயலட்சுமிக்கு உடன் இருந்தவர் வீரலட்சுமி. தற்போது திடீரென விஜயலட்சுமி, சீமான் மீதான புகாரை வாபஸ் பெறுவதாக அறிவித்துவிட்டு பெங்களூரு சென்றுவிட்டார். அத்துடன் வீரலட்சுமி தம்மை சித்ரவதை செய்ததாகவும் குற்றம்சாட்டினார். ஆனால், வீரலட்சுமி இதனை மறுத்ததுடன், விஜயலட்சுமியிடம் சீமான் காலில் விழுந்துவிட்டார். அவருக்கு பணம் கொடுத்து செட்டில் செய்துவிட்டார் என்றார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோவில், ”விஜயலட்சுமிக்கு புதியதாக ஆடைகள் வாங்கி கொடுத்தோம் என வீரலட்சுமி கூறியுள்ளார். நான் என்ன மனநிலையில் இருக்கிறேன் என்பது வீரலட்சுமிக்குப் புரியவில்லை. அவங்க எப்ப பார்த்தாலும் நான் உங்களுக்கு நிறைய துணிமணி வாங்கி தருகிறேன். நிறைய மல்லிகைப்பூ வாங்கித் தருகிறேன். நீங்க சிங்காரித்துக் கொண்டு என் கூட வீடியோ பேசுங்க. அப்பதான் சீமான் வயிறு எரிந்து சாகட்டும் என்பார்.
ஆனால் நான், சீமான் என்னுடன் வாழ்கிறாரோ இல்லையோ.. சீமான் தான் என் கணவர்; நான் அவரை அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அவர் என்னை எப்ப விட்டுட்டு போனாரோ அப்ப இருந்துட்டு நான் பெரிதாக சிங்காரித்துக் கொண்டு பூ வைத்துக் கொள்வது இல்லை. ஒரு கணவரை இழந்த பொண்ணு மாதிரிதான் நான் இருப்பேன். இதையெல்லாம் வாங்கிக் கொடுத்தாலும் போடமாட்டேன் என்று சொன்னேன். அவர் வாங்கி கொடுத்ததையும் அவர் வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டேன்.
நீங்க தொடர்ந்து அவதூறுகளை பேசிட்டு இருக்கீங்க.. சென்டில்மென்ட் ஆகிடுச்சு.. அதாகிடுச்சு.. இதாகிடுச்சுன்னு பேசிகிட்டு இருந்தீங்கன்னா நான் சென்னையில் இல்லை என்றாலும் என்னுடைய வழக்கறிஞர் சென்னையில்தான் இருக்காங்க. அப்புறம் நானும் வேறவழியே இல்லாம உங்க மேல மான நஷ்ட வழக்கு போட வேண்டியது வரும். அப்படி ஒரு சூழ்நிலைக்கு தயவு செய்து என்னை தள்ளிடாதீங்க என ரொம்ப பணிவாக இந்த வீடியோ மூலம் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.