தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
➦ சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
➦ கைத்தறி இயக்குநராக மகேஸ்வரி ரவிக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
➦ தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய மேலாண்மை இயக்குநராக அண்ணாதுரை நியமனம்.
➦ செங்கல்பட்டு சார் ஆட்சியராக இருந்த நாராயண சர்மா செங்கல்பட்டு கூடுதல் ஆட்சியர், திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
➦ சேலம் மாநகராட்சி ஆணையராக இருந்த ரஞ்சித் சிங், தேனி கலெக்டராக நியமனம்.
➦ கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளராக சத்யபிரதா சாகு நியமனம்.
➦ உயர்கல்வித்துறை செயலாளராக சமயமூர்த்தி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக மதுமதி நியமனம்.
➦ சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளராக சுப்ரியா சாகு நியமனம்.
➦ கோவை மாவட்ட ஆட்சியராக பவன் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
➦ வணிக வரி மற்றும் பதிவுத்துறை கூடுதல் தலைமை செயலாளராக குமார் ஜயந்த் நியமனம்
Read More : Central Bank Of India-வில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! மாதம் ரூ.86,000 சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!