ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்4 சுற்றில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பமோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் கில் இருவரும் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினர்.
இந்தியாவின் முதல் விக்கெட் 16.4 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விழுந்தது, அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோஹித் ஷர்மா 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார், அவரைத்தொடர்ந்து அடுத்த ஓவரே(17.5) கில்லும் 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு விராட் கோலியுடன் ( 16 பந்துகளில் 8 ரன்கள்) அட்டமிழக்காமல் ஆடி வருகிறார் கே.எல்.ராகுல் ( 28 பந்துகளில் 17 ரன்கள்). இப்படி போட்டி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் 24.1 ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டுள்ளது. இந்திய அணி 24.1 ஓவர்களில் 2விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான், அப்ரிடி ஆகியோர் தல ஒரு விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.
கடந்த இந்தியா பாகிஸ்தான் ஆட்டமும் மழையால் தடைப்பட்டதை போல் இந்த ஆட்டம் தடைபட வாய்ப்பில்லை, அது ஏனென்றால் இந்த போட்டி மழையால் தடைபட்டால் ஆட்டம் எங்கு கைவிடப்பட்டதோ ரிசர்வ் டேவில் மீதி ஆட்டம் தொடரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.