fbpx

இன்னும் 5 நாட்களுக்கு மழை தொடரும்.. எந்தெந்த இடங்களில் தெரியுமா..?

தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும் 21, 22 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர் மாவட்டங்கள், புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

வரும் 23-ம் தேதி, வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடற்கரையை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகள், இலங்கை கடற்கரையை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.. எனவே வரும் இன்று முதல் வரும் 21-ம் தேதி வரை, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

16 வயது பெண்ணை கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களின்... வீட்டை புல்டோசர் வைத்து இடித்து நடவடிக்கை..!

Mon Sep 19 , 2022
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் இருக்கும் நைகாரி என்ற பகுதியில் வசித்து வரும் 16 வயது இளம்பெண் கடந்த சனிக்கிழமை மாலை அவருடைய ஆண் நண்பருடன் அருகே இருந்த கோயிலுக்கு சென்றுள்ளார். கோயிலுக்கு அருகே இருந்த இடத்தில் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது அந்த பகுதிக்கு இரண்டு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் அங்கு வந்துள்ளனர். இளம் பெண்ணின் ஆண் நண்பரை தாக்கி விட்டு அந்த ஆறு பேரும், ஆண் நண்பரின் […]

You May Like