fbpx

இன்னும் 5 நாட்களுக்கு மழை தொடரும்.. வானிலை மையம் குட்நியூஸ்…

தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதஇகளில்‌ ஒரு சிலஇடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

வரும் 11-ம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும் 12, 13 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுஇகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

இன்றும் நாளையும், குமரிக்கடல்‌ பகுதி, மன்னார்‌ வளைகுடா, தென்‌ தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும்‌ அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதி, ஆந்திர கடலோர பகுதிகள், அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கி.மீ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

வரும் 11, 12, 13 ஆகிய தேதிகளில், மத்திய வங்க கடல்‌ பகுதிகள், லட்சத்தீவு, கர்நாடகா-கேரளா கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கி.மீ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. எனவே இந்த நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

அமைச்சர் துரைமுருகன் வெற்றி பெற காரணம் கே.பி.முனுசாமியா? கோவை செல்வராஜ் பரபரப்பு பேட்டி

Sat Jul 9 , 2022
ஓபிஎஸ் குறித்து அவதூறு பரப்புவதை கே.பி.முனுசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரை கோவை செல்வராஜ் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கே.பி.முனுசாமி கூலி ஆட்கள் போன்று காசுக்காக வேலை செய்கிறார். எட்டப்பன் போல் செயல்படுகிறார். திமுகவின் சில அமைச்சர்களுக்கு அவர் கொத்தடிமையாக செயல்படுகிறார். பெட்ரோல் பங்க் வாங்கவில்லை என சொல்ல […]
திடீர் உடல்நலக்குறைவு..!! அமைச்சர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!!

You May Like