fbpx

இன்னும் 5 நாட்களுக்கு மழை தொடரும்.. வானிலை மையம் தகவல்..

தமிழகத்தில் வரும் 18-ம் தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும் 16, 17, 18 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 வேகத்தில் வீசக்கூடும்.. எனவெ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

கோயில்களை தரிசிக்க வந்த சாமியார்களுக்கு அடி உதை..!! பிள்ளை பிடிக்க வந்ததாக நினைத்த கிராம மக்கள்..!

Wed Sep 14 , 2022
உத்தர பிரதேச மாநிலத்தில் மதுரா நகரை சேர்ந்த சாமியார்கள் நான்கு பேர் ஒவ்வொரு ஊராக சென்று அங்குள்ள கோவில்களை தரிசனம் செய்ய புனித பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் கர்நாடகாவின் பிஜாப்பூருக்கு சென்று சாமி தரிசனம் செய்து இருக்கின்றனர். அதன்பிறகு, சோலாப்பூரில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளனர். அவர்கள், மராட்டியத்தின் சங்கிலி மாவட்டத்திற்கு வந்தபோது, வழி தெரியாததால், அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த சிறுவனிடம் வழி கேட்டுள்ளனர். ஆனால், […]

You May Like