fbpx

23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை..!! இந்த லிஸ்ட்ல உங்க ஊரும் இருக்கா..? வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதும் மாலை நேரத்தில் திடீரென மழை பெய்தும் வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி, பெரம்பலூர், கடலூர், அரியலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருப்பூர், கரூர், கோவை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு, நீலகிரி, விருதுநகர், தென்காசி, குமரி மற்றும் மதுரை ஆகிய 12 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

”பிரக்யான் ரோவர் இந்த வேலையை சரியாக செய்யவில்லை”..!! இஸ்ரோ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

Sun Sep 24 , 2023
நிலவின் மேற்பரப்பில் பிரக்யான் ரோவர் வலம் வந்தபோது அதன் சக்கரத்தில் இருந்த இந்தியாவின் தேசியச் சின்னம் தெளிவாகப் பதிவு செய்யப்படவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான் – 3 பிரக்யான் ரோவரின் பின்புற சக்கரங்களில் இந்திய தேசிய சின்னமும் இஸ்ரோவின் லோகாவும் பொறிக்கப்பட்டுள்ளது. ரோவர் நிலவில் தரையிறங்கி உலா வரும்போது இந்த சின்னங்கள் தரையில் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டு சின்னங்களும் தெளிவான முத்திரையாகப் பதிவு செய்யப்படவில்லை […]

You May Like