குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கான குறைந்தபட்ச வயதை உயர்த்தியது கேரளா அரசு.
கேரளாவில் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கான குறைந்தபட்ச வயது 5ல் இருந்து 6-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குழந்தைகள் 6 வயதில் தான் முறையான கல்விக்கு தயாராவதாக ஆய்வுகள் கூறுவதாக அமைச்சர் சிவன்குட்டி மேற்கோள் காட்டியுள்ளார்.
கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி கூறியதாவது, மாநிலத்தில் 1 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான குறைந்தபட்ச வயது ஆறு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்தார். இங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதுவரை, ஐந்து வயதில் குழந்தைகள் 1 ஆம் வகுப்பில் சேர்க்கப்படலாம் என்றும், ஆனால் ஆறு வயதை எட்டிய பிறகு அவர்கள் முறையான கல்விக்கு சிறப்பாக தயாராக இருப்பதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்றும் அமஙசிவன்குட்டி கூறினார்.
கேரளாவில், பாரம்பரியமாக பெற்றோர்கள் ஐந்து வயதில் குழந்தைகளை 1 ஆம் வகுப்பில் சேர்ப்பது வழக்கம். இருப்பினும், 50 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் இப்போது ஆறு வயதில் பள்ளிக்குச் செல்கிறார்கள், மேலும் இந்தப் போக்கு ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். 1 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான திருத்தப்பட்ட வயதுத் தேவை 2026–27 கல்வியாண்டிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று சிவன்குட்டி கூறினார்.