கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்ய பிரதமர் மோடிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
ஜெய்ப்பூரில் செய்தி அவர்களிடம் பேசிய அவர்; தென் மாநிலத்தில் மதத்தின் அடிப்படையில் மோடி வாக்கு சேகரித்து வருவதாக குற்றச்சாட்டினார். தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களை மீறி மதத்தின் அடிப்படையில் மோடி வாக்கு கேட்டு வருகிறார். அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தில் மதத்தின் பெயராலும், மதத்தின் பெயராலும் பேசினால், தடை விதிக்க வேண்டும். தகவல் மோடி சட்டத்தை படிக்க வேண்டும். இப்படி மதத்தின் அடிப்படையில் செயல்படும் பாஜகவை மக்கள் நிராகரிப்பார்கள் என கூறினார்.
கர்நாடக மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் வருகின்ற பத்தாம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு சேகரிப்பில் காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளனர் தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் முடிவடைந்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராகுல் காந்தி, சோனியா காந்தி என அனைத்து முக்கிய தலைவர்களும் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.