fbpx

ராமர் கோயில் கும்பாபிஷேகம்..!! டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நாளை இயங்காது..!! நோயாளிகளின் கதி..?

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறவுள்ளது. நாளை மதியம் 12.20 மணிக்கு கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. பிரதமர் மோடி பங்கேற்கு ராமர் சிலைக்கு சடங்குகள் செய்ய உள்ளார். இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், மடாதிபதிகள், சாமியார்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என 3 ஆயிரம் விவிஐபிக்கள் உள்பட மொத்தம் 10,000 பேர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நாளைய தினம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எய்ம்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”நாளைய தினம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி மருத்துவமனை காலையில் இருந்து பிற்பகல் 2.30 மணி வரை இயங்காது. இருப்பினும் நோயாளிகளின் நலன் கருதி அவசர சிகிச்சை பிரிவுகள் உள்பட சில முக்கிய சிகிச்சை பிரிவுகள் இயங்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ஷகீலா மீது கொடூர தாக்குதல்..!! பஞ்சாயத்து செய்ய வந்த வக்கீல் மீதும் அட்டாக்..!! வளர்ப்பு மகள் மீது பரபரப்பு புகார்..!!

Sun Jan 21 , 2024
நடிகை ஷகீலாவை அவரது வளர்ப்பு மகளான ஷீத்தல் தாக்கிய நிலையில், சமாதானம் பேச வந்த வழக்கறிஞரையும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல நடிகை ஷகீலா சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவரது சகோதரர் இறந்துவிட்ட நிலையில், அவரது மகள் ஷீத்தல் என்பவரை வளர்ப்பு மகளாக நடிகை ஷகீலா வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று வீட்டில் ஷீத்தல் நடிகை ஷகீலாவை தாக்கி விட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். இது குறித்து தகவல் […]

You May Like