fbpx

பொதுமக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் புதிய அதிபராக ரணில் விக்ரம சிங்க தேர்வு…

இலங்கையின் புதிய அதிபராக ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்..

இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி அந்நாட்டு கடந்த சில மாதங்களாகவே தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதையடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.. எனினும் அதிபர் கோட்டபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என்று போராடங்கள் மீண்டும் வலுப்பெற்றன.. இதையடுத்து தனது அதிகாரப்பூர்வ அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடிய கோட்டபய முதலில் மாலத்தீவுக்கு சென்றார்.. ஆனால் அங்கும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பின்னர் சிங்கப்பூர் சென்றார்.. இதனிடையே சிங்கப்பூரில் உள்ள கோட்டபய, ராஜபக்ச ராஜினாமா செய்ததாக இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்..

இந்நிலையில் இலங்கை புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடாளுமன்றத்தில் தொடங்கியது.. இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்ரம சிங்க, டலஸ் அழகப்பெரும, அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் போட்டியிடுகின்றனர்.. இந்த ரகசிய வாக்கெடுப்பில் மொத்தம் உள்ள 225 எம்.பிக்களில் 2 பேர் ரகசிய வாக்கெடுப்பை புறக்கணித்த நிலையில் 223 எம்.பிக்கள் வாக்களித்தனர்.. இந்த வாக்கு எண்ணிக்கையில் டலஸ் அழகப்பெருமவுக்கு 82 ஓட்டுகளே கிடைத்துள்ளது. 4 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது..

குறைந்தது 113 எம்.பிக்களின் ஆதரவை பெறுபவர் அதிபராக முடியும்.. அதன்படி ரகசிய வாக்கெடுப்பில் ரணிலுக்கு 134 எம்.பிக்களின் ஆதரவு கிடைத்துள்ளது.. இதன் மூலம் இலங்கையின் புதிய அதிபராக ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. இடைக்கால அதிபராக இருந்த ரணில் 134 எம்.பிக்களின் ஆதரவுடன் முறைப்படி அதிபராக தேர்வாகி உள்ளார்.. கோட்டபயவின் பதவிக்காலம் முடியும் 2024 வரை பதவியில் ரணில் அதிபர் இருப்பார்.. இலங்கை அரசியல் வரலாற்றில் 2-வது முறையாக நாடாளுமன்றம் மூலம் அதிபர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. முன்னதாக ரணிலும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் நடத்தி வந்த நிலையில் தற்போது அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது….

Maha

Next Post

அன் இன்ஸ்டால் செய்யாமல் வாட்ஸ்அப் செயலியை எப்படி Disable செய்வது..?

Wed Jul 20 , 2022
இந்தியாவிலும் உலகிலும் மிகவும் பிரபலமான மெசேஜிங் செயலிளில் வாட்ஸ் அப் செயலியும் ஒன்றாகும். தினமும் பில்லியன் கணக்கான செய்திகள் பரிமாறப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பல நேரங்களில், நீங்கள் செய்தி அனுப்புவதற்கு WhatsApp ஐப் பயன்படுத்த வேண்டாம் என்று நினைக்கலாம்.. மேலும் வாட்ஸ் அப் செயலியில் இருந்து மெசேஜ் வருவதை நிறுத்த விரும்பலாம். வாட்ஸ்அப் செயலியை அன் இன்ஸ்டால் செய்தால் மட்டுமே மெசேஜ் பெறுவதை தவிர்க்க முடியும்.. மேலும் உங்கள் மொபைல் […]

You May Like