சாக்லேட் என நினைத்து எலி பேஸ்ட்டை சாப்பிட்ட 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் புதுசாரம் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் மேரி ரோஸ்லின். இவருக்கு 3 வயதில் தியா என்ற பெண் குழந்தை உள்ளது. கணவர் இறந்துவிட்ட நிலையில், மேரி ரோஸ்லின் தான் வேலைக்கு சென்று வருமானம் ஈட்டி வருகிறார். வேலைக்கு சென்றால் குழந்தையை பார்ப்பதற்காக தனது தாய், தந்தை, சகோதரிகள் ஆகியோரையும் தனது வீட்டில் வைத்துள்ளார் ரோஸ்லின். இந்நிலையில், கடந்த 11ஆம் தேதி காலை மேரி ரோஸ்லின் வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது குழந்தை தியா வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்துள்ளது. ரோஸ்லினின் பெற்றோரும், சகோதரிகளும் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தாக தெரிகிறது. அப்போது நீண்டநேரமாக குழந்தையின் சத்தம் வராததால் அவர்கள் வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது குழந்தை தியா வாயில் நுரையுடன் கீழே மயங்கிக் கிடந்தது. மேலும், அதன் அருகே எலி பேஸ்ட்டும் இருந்துள்ளது.
![சாக்லேட் கவரில் எலி பேஸ்ட்..? 3 வயது குழந்தை துடிதுடித்து..!! கதறி அழுத பெற்றோர்..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/11/Death-1-1024x688.jpg)
எலி பேஸ்ட்டும் சாக்லேட் போன்ற கவரில் இருந்ததால், சாக்லேட் என நினைத்து குழந்தை தியா, எலி பேஸ்ட்டை சாப்பிட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, குழந்தையை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். எனினும், சிகிச்சை பலனில்லாமல் குழந்தை தியா நேற்று உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து தன்வந்தரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.