fbpx

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்… வரும் 5-ம் தேதி வரை கனமழை தொடரும் என அறிவிப்பு..

தமிழகத்தில் 3 நாட்களுக்கு அதி கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கன்னியாகுமரி, நெல்லை, மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ மிக கனமழை முதல்‌ அதி கனமழை பெய்யக்கூடும்.. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, மதுரை மற்றும்‌ விருதுநகர்‌ மாவட்டங்களில்‌ ஒரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, தூத்துக்குடி, சிவகங்கை, திருச்சி, கரூர்‌, நாமக்கல்‌, ஈரோடு, சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகுரி, இருப்பத்தூர்‌ மற்றும்‌ வேலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மற்றும்‌ தேனி மாவட்டங்களில்‌ ஒரிரு இடங்களில்‌ யிக கனமழை முதல்‌ அதி கனமழை பெய்யக்கூடும்.. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, திண்டுக்கல்‌ மற்றும்‌ விருதுநகர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கரூர்‌, நாமக்கல்‌, ஈரோடு, சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌ மற்றும்‌ வேலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 3-ம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, தேனி மற்றும்‌ தென்காசி, மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ மிக கனமழை முதல்‌ அதி கனமழையும்‌, ஈரோடு, மதுரை, விருதுநகர்‌, நெல்லை மற்றும்‌ கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, திருச்சி, கரூர்‌, நாமக்கல்‌, சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌ மற்றும்‌ ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

04.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர்‌, மதுரை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தருப்பத்தூர்‌, வேலூர்‌, மற்றும்‌ ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 5-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதஇகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை மாவட்டங்களில்‌ ஒரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை..

இன்று முதல் 5-ம் தேதி வரை லட்சத்தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும்‌ மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள், குமரிக்கடல்‌ பகுதிகள், மன்னார்‌ வளைகுடா , அரபிக் கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், தென்‌ தமிழக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கி.மீ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

துப்பாக்கி காட்டி மிரட்டி.. ஆடைகளை களைய சொல்லி...பாலியல் வன்கொடுமை... இளைஞர்கள் கைது...!

Mon Aug 1 , 2022
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள 30 வயது ஒருவர் நேற்று மாலை கால்நடைக்கு புல் அறுக்க வயலுக்கு சென்றார். அந்த பெண் தனது ஆண் நண்பரை பார்க்க வயல் பகுதிக்கு சென்றதாகவும் சிலர் கூறுகின்றனர். அப்போது, அந்த பெண்ணின் பின்னால் வந்த அந்த பகுதியை சேர்ந்த 7 பேர் வயலுக்கு செல்லும் வழியில் காட்டுப் பகுதியில் அந்த பெண்ணை வழிமறித்துள்ளனர். அதன் […]

You May Like