ரிசர்வ் காவல் படையில் 20,000 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்கள் நியமனம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
ரிசர்வ் காவல்படையில் 20,000 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்கள் நியமனம் குறித்த பத்திரிகை ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் தவறான தகவல் பரப்பப்படுகிறது. இது தொடர்பாக ரிசர்வ் காவல் படை அல்லது ரயில்வே அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ இணையதளங்களிலோ அல்லது பத்திரிகைகளிலோ அல்லது மின்னணு ஊடகங்களிலோ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என பிஐபி தெரிவித்துள்ளது.
போலி செய்திகளை தடுக்கும் விதமாகப் பத்திரிகை தகவல் பணியகம் டிசம்பர் 2019 இல் இந்த உண்மைச் சரிபார்ப்புக் குழுவை தொடங்கியது. அதன் நோக்கம் “பல்வேறு சமூக ஊடக தளங்களில் பரவி வரும் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான தவறான தகவல்களை அடையாளம் காணப்பட்டு, அதனுடைய உண்மைத்தன்மையை மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாக உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.