fbpx

அதிர்ச்சி..! ரயில்களில் இனி ஸ்லீப்பர் கோச் கிடையாது…! டிக்கெட்டை நிறுத்தம் செய்யப் போவதாக தகவல்…!

திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் பகல் நேர பயணத்திற்கான ஸ்லீப்பர் ரயில் டிக்கெட் நிறுத்தம் செய்யப் போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளில் பயணிக்கும் பகல்நேர ஸ்லீப்பர் டிக்கெட் வைத்திருப்பவர்கள் மீதான புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் ரயில்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் பொருந்தும். இருப்பினும், திருவனந்தபுரத்தில் இருந்து தொடங்கும் பகல் நேர ரயில்களின் முன்பதிவு நீக்கப்பட்ட பெட்டிகளுக்கு ஸ்லீப்பர் டிக்கெட் வழங்கப்படும்.

கேரளாவில் இருந்து சென்னை செல்லும் ஆலப்புழா-சென்னை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை மங்களூர்-சென்னை மெயில், மலபார் மங்களூர்-சென்னை-மங்களூர், திருவனந்தபுரம்-சென்னை, கன்னியாகுமரி-பெங்களூரு உள்ளிட்ட ரெயில்களில் இந்த திட்டம் அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.

ரயில் எண்கள்

மங்களூர்- சென்னை எழும்பூர் (16160/16159), திருவனந்தபுரம்- செகந்திராபாத் சபரி (17229), கன்னியாகுமரி- புனே (16382), திருவனந்தபுரம்- சென்னை (12624), கன்னியாகுமரி- பெங்களூர் எக்ஸ்பிரஸ் (16525) உள்ளிட்ட ரயில்களும் இந்த பட்டியலில் ஆடலும்.

Vignesh

Next Post

கிராம உதவியாளர் பணிகளுக்கான நேர்காணல்..!! கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க..!!

Mon Jan 2 , 2023
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் 10ஆம் தேதி வெளியானது. குறைந்தபட்சமாக 8ஆம் வகுப்பு கல்வித் தகுதி தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தனர். பெறப்பட்ட விண்ணப்பங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கடந்த மாதம் 4ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான […]
கிராம உதவியாளர் பணிகளுக்கான நேர்காணல்..!! கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க..!!

You May Like