சேலம் மாவட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ”என் மண், என் மக்கள்” நடைபயணம் மேற்கொண்டார். அப்போது, ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் மோகன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், பாஜகவில் இணைந்தனர்.
அவர்களுக்கு பாஜக அடையாள அட்டையை வழங்கிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாடாளுமன்ற தேர்தலுக்காக இப்போதே பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார். அண்ணாமலையின் நடைபயணத்தால், பல பேர் பாஜகவில் இணைந்து வரும் நிலையில், திமுக – அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கலக்கத்தில் உள்ளனர்.