fbpx

Rice Price | மேலும் உயர்ந்த அரிசி விலை..!! ஓட்டல் உணவுகளின் விலை தாறுமாறாக உயரும் அபாயம்..!!

சென்னையில் ஓட்டல்களில் இட்லி, தோசை உள்ளிட்ட உணவுகளின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Rice Price | தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது. முதலில் தக்காளி. அடுத்து சின்ன வெங்காயம். பிறகு பூண்டு என விலைகள் உயர்ந்தன. மற்றொரு பக்கம் அரிசி, பருப்புகளின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அரிசியை பொறுத்தவரை, கடந்த 6 மாதங்களாகவே விலை அதிகரித்து காணப்படுகிறது. தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 25 கிலோ அரிசி மூட்டையின் விலை ரூ.100 அதிகரித்தது.

சம்பா சாகுபடிக்கு மழை கைகொடுக்கும் என நம்பி விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்டனர். ஆனால், போதிய மழையும் கிடைக்கவில்லை. மேலும், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் ஓரிரு நாட்கள் பெய்த மழைக்கே, வயலில் தண்ணீர் தேங்கி பாதிப்பை தந்துவிட்டது. இவையெல்லாம் சேர்ந்தே தமிழகத்தில், அரிசி விலை உயர்வுக்கு காரணமாகிவிட்டது. எனினும், ரேஷன் கடைகளில் அரிசி தட்டுப்பாடு எதுவும் வராது என்றும், வழக்கம் போல ரேஷன் கடைகள் மூலமாக அரிசி விநியோகம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்திருந்தார். ஆனால், அரிசி விலை மட்டும் உயர்ந்தபடியே உள்ளது.

சென்னையில் ஏற்கனவே மொத்த விலையில் கிலோ ரூ.60-க்கு விற்ற புழுங்கல் அரிசி, இப்போது கிலோ ரூ.68 ஆக உயர்ந்துவிட்டது. ரூ.60-க்கு விற்ற வேகவைத்த அரிசி ரூ.70 ஆக உயர்ந்து விட்டது. பாஸ்மதி அரிசி கிலோ ரூ.120-க்கு விற்கப்படுகிறது. பழுப்பு அரிசி ரூ.39-க்கு விற்கப்படுகிறது. ரூ.37-க்கு விற்ற இட்லி அரிசி ரூ.40 ஆக உயர்ந்துவிட்டது. பிராண்டட் அரிசி கிலோவுக்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் சென்னையில் சில்லறை விற்பனையில் அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.17 வரை உயர்ந்துள்ளது. இப்படி தொடர்ந்து அரிசி விலை உயர்ந்து வருவதால், இல்லத்தரசிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அதைவிட முக்கியமாக, சென்னையில் ஓட்டல்களில் இட்லி, தோசை உள்ளிட்ட உணவுகளின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Read More : Gokula Indira | ’கூட்டணி அமையாவிட்டால் 40 தொகுதிகளிலும் அதிமுக போட்டி’..!! மாஜி அமைச்சர் கோகுல இந்திரா பரபரப்பு பேட்டி..!!

Chella

Next Post

Prostitution | வில்லிவாக்கத்தில் விபச்சார தொழில்..!! வில்லங்கமான ரேவதி..!! சுத்துப் போட்ட போலீஸ்..!!

Wed Feb 21 , 2024
Prostitution | சென்னையில் விபச்சார கும்பல்கள் போலீசுக்கு தெரியக்கூடாது என்பதற்காக பல்வேறு இடங்களில் ரகசியமாக செயல்பட்டு வருகின்றனர். அப்படி செயல்பட்டு வரும் விபச்சார கும்பல்களை போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி கண்டுபிடிக்கின்றனர். அப்படித்தான் வில்லிவாக்கத்தில் உள்ள வீட்டில் நடந்திருக்கிறது. சென்னை வில்லிவாக்கம் சீயாலன் 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் விபச்சார தொழில் நடப்பதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் புகார் எழுந்தது. இது தொடர்பாக சென்னை விபச்சார தடுப்பு பிரிவு […]

You May Like