fbpx

அதிகரிக்கும் நீர்மட்டம்..!! 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உருவாகிறது தென்பெண்ணை ஆறு. இந்த ஆறு கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களை கடந்து வங்கக்கடலில் கலக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கேஆர்பி அணை கட்டப்பட்டுள்ளது.

இந்த அணையில் சேமிக்கப்படும் தண்ணீர், குடிநீர் மற்றும் விவசாய தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கர்நாடகாவின் நந்தி மலை, தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப் பொழிவு இருக்கும் போது கேஆர்பி அணைக்கு வரும் நீர்வரத்து அதிகமாக இருக்கும். தற்போது கர்நாடகாவின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முழுக்கொள்ளளவான 52 அடி உயரம் கொண்ட இந்த கேஆர்பி அணையின் நீர்மட்டம் 50 அடியை தாண்டி 50.40 அடியாக உள்ளது. இதனை தொடர்ந்து அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் 1,290 கனஅடி தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் ஆற்றின் கரையை கடக்க வேண்டாம் என்றும் ஆற்றில் இறங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கால்நடைகளை ஆற்றங்கரையோரம் மேய்ச்சலுக்காக கொண்டு செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Chella

Next Post

தவறான விளம்பரம்... ரூ .5 லட்சம் அபராதம்...! மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை...!

Fri Nov 10 , 2023
தவறான விளம்பரம் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைக்காக கான் பயிற்சி மையத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ .5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. நாடு முழுவதும் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 மீறப்படுவதைக் கருத்தில் கொண்டு, தலைமை ஆணையர் நிதி காரே மற்றும் ஆணையர் அனுபம் மிஸ்ரா தலைமையிலான மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தவறான விளம்பரங்கள் மற்றும் […]

You May Like